Friday, May 3, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்52,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் அவதார்; காத்திருப்பில் ரசிகர்கள்..

    52,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் அவதார்; காத்திருப்பில் ரசிகர்கள்..

    அவதார் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் 52,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

    அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்தை, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். 

    கடந்த 2009-ம் ஆண்டு ‘அவதார்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதார் திரைப்படம் பல மாயங்களை நிகழ்த்தியது. கூடவே வசூல் சாதனைகளையும் நிகழ்த்தியது. 

    அவதார் திரைப்படம் 2009-ம் ஆண்டு வெளிவந்தபோதே, இத்திரைப்படத்தில் புதுமையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அவை பெரிய வியப்பாகவே ரசிகர்களிடத்தில் இருந்தது. இதையடுத்து, அவதார் திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுமா என ரசிகர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். இதையடுத்து, அவதார் படத்தின் அடுத்த பாகங்களை உருவாக்க உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். 

    அதன் தயாரிப்பு பணிகள் இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இறுதியில் அவதார் 2-ம் பாகம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

    அதன்படியே, தற்போது உலகம் முழுவதும் நாளை அவதார் திரைப்படம் வெளியாகவுள்ளது. உலகம் முழுவதும் 52,000-த்திற்கும் அதிகமான திரைகளில் அவதார் நாளை திரையிடப்படவுள்ளது. 160-க்கும் அதிகமான மொழிகளில் வெளியாகவுள்ளது. 

    குறிப்பாக, தமிழகத்தில் அதிகாலை காட்சிகளில் அவதார் திரையிடப்பட இருக்கிறது. அவதாரை காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். 

    நீதானே என் பொன்வசந்தம்: பத்தாண்டை நிறைவு செய்யும் வருண்-நித்யாவின் காதல் கதை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....