இயக்குநர் அட்லீயின் மனைவி பிரியா, தான் கரப்பமாக உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
2013-ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகாமனவர், அட்லீ. இதைத்தொடர்ந்து, இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற திரைப்படங்கள் வெளிவந்து பெரிய அளிவில் ஹிட் அடித்தது. இதனால் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநர்களுள் ஒருவராக அட்லீ உருவெடுத்துள்ளார்.
இதனிடையே ராஜா ராணி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, தனது நீண்ட நாள் நண்பரான நடிகை ப்ரியாவை 2014-ஆம் ஆண்டு அட்லீ திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில், தற்போது ப்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் கர்ப்பமாக உள்ளேன். அனைவருடைய ஆசிர்வாதங்களும் தேவை என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
இதைத்தொடர்ந்து, தற்போது திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் அட்லீ மற்றும் ப்ரியாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் அட்லீ தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்கிற ஹிந்திப் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
‘எதையும் வாங்காதீர்கள்..பணத்தை சேமியுங்கள்’ – அறிவுரை கூறிய உலக பணக்காரர்…