திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பு தளத்தில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் கயிறு அறுந்து உயிரிழந்தார். இதையடுத்து ஐயர்கண்டிகையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் லைட் மேன் குமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
தொடர்ச்சியான விபத்துகளால் திரையுலகின் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், திரைப்பட தொழிலாளர்களுக்காக பல்வேறு உதவிகளை கோரி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மத்திய மாநில அரசுகளிடம் முறையிட்டுள்ளது.
மேலும், உடனடியாக திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்ட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நேரு விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது வரும் மார்ச் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியின் மூலம் வரும் நிதியில் விபத்து ஏற்பட்டால், விபத்தில் இறக்கும் திரைப்பட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் இனி இப்படித்தான்… வெளிவந்த அறிவிப்பு..