Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதலா; என்ன நடக்கப்போகிறது?

    இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதலா; என்ன நடக்கப்போகிறது?

    நபிகள் நாயகம் பற்றிய தவறான கருத்தினைக் கூறிய நுபுர் ஷர்மாவினை கைது செய்யக்கோரி இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் சிறு சிறு கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அல்-கொய்தா எனப்படும் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டியில் நபிகள் தொடர்பான சர்ச்சைக்கு கருத்து ஒன்றிணைக் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் பலத்த கண்டனங்கள் இந்தியாவில் இருந்தும், உலக நாடுகளிடமிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன.

    ‘இந்த கருத்து ஒரு தனி நபரின் சொந்த கருத்தேயன்றி இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த பார்வையினை சித்தரிக்கும் கருத்து அல்ல. இந்தியாவானது அனைத்து மதங்களையும் மதிக்கும் ஒரு நாடு.’ என்று ஏற்கனவே இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகமானது கருத்து தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில், நுபுர் ஷர்மா கூறிய கருத்தினையடுத்து அவருக்கு கண்டனம் தெரிவித்து கான்பூரில் கடையடைப்பில் ஈடுபட்டிருந்த போது அங்கு பெரும் கலவரமே வெடித்தது. இந்த நிகழ்ச்சியினையடுத்து நுபுர் ஷர்மா பாஜக கட்சியிலிருந்தும், செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

    இருப்பினும் அவரைக் கைது செய்யக்கோரியும், நுபுர் ஷர்மா கூறிய கருத்திற்கு பாஜக அரசானது மன்னிப்பு கூற கோரியும் நாடெங்கும் சிறு சிறு கலவரங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அல்-கொய்தா கொடுத்திருக்கும் இந்த எச்சரிக்கையானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    நபிகள் நாயகத்தினைப் பற்றிய தவறான கருத்தினைக் கூறியுள்ள பாஜக தலைவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக குஜராத், உத்தரப்பிரதேசம், மும்பை, டெல்லி போன்ற இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக அல்-கொய்தா அமைப்பு கூறியுள்ளது. இந்த தாக்குதலினை செயல்படுத்த தீவிரவாதிகள் டெல்லி, மும்பை, குஜராத், உத்தரபிரதேசம் ஆகிய இடங்களில் தயாராக இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. 

    ஒரு கடித்தத்தின் மூலம் இந்த செய்தியினை இந்திய அரசிற்கு தெரிவித்திருந்த அல்-கொய்தா அமைப்பு, மேலும் அந்தக் கடிதத்தில், ‘நுபுர் ஷர்மா நபிகள் நாயகத்தினையும், அவரது துணைவியாரையும் மிகவும் மோசமான விதத்தில் சித்தரித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் மனமானது புண்பட்டுள்ளது. அவர்களது மனம் முழுவதும் பழிவாங்கும் எண்ணம் பரவியுள்ளது .’ என்று குறிப்பிட்டுள்ளது.

    நாளுக்கு நாள் நுபுர் ஷர்மாவின் பேச்சு மிகப்பெரும் பிரளயத்தினை உண்டாக்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாகக் கூறியுள்ளது நாடெங்கும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி வருகின்றது.

    சொகுசு கப்பல் புதுச்சேரிக்குள் நுழையக் கூடாதா? – தமிழிசை சவுந்தராஜன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....