Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

    மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

    தமிழக அரசின் மின்கட்டண உயர்வை எதிர்த்து, வருகிற ஜூலை 25-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

    மத்திய அரசின் தொடர் வலியுறுத்தலுக்கு ஏற்ப, தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 18ம் தேதி அறிவித்தார். மேலும், மின் கட்டணமானது 101 யூனிட் முதல் அனைத்து நிலைகளிலும் உயர்த்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். அதன்படி, ரூ.55 முதல் ரூ.1130 வரை மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 

    மின்கட்டண உயர்வு குறித்து மின் நுகர்வோர் தங்கள் கருத்துகளை அளிக்க 30 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது எனவும் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் எனவும் மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்திருந்தது. 

    இந்நிலையில், மின்கட்டண உயர்வைக் கண்டித்து வரும் ஜூலை 25-ம் தேதி  அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

    தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜூலை 25-ம் தேதி காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளார். 

    மின் கட்டணத்தை உயர்த்தி கருத்து கேட்கும் அரசு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....