Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த விடியா திமுக - விமர்சித்த அன்பழகன்

    பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த விடியா திமுக – விமர்சித்த அன்பழகன்

    அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

    புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த விடியா திமுகவின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அத்திட்டத்தை துவக்க இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வாக்களித்த மக்களுக்கு துரோகத்தை இழைத்து வருவதாக தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில்,

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர் ரங்கசாமி எங்களது தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படாமலேயே குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 நிதியுதிவு வழங்கும் திடத்தை இந்தியாவில் முதன் முதலில் துவக்கியுள்ளார்.

    அரசின் சார்பில் மாதந்தோறும் எவ்வித உதவித்தொகையும் பெறாத வறுமையில் வாடி வரும் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையை ஏற்று அதை அமல்படுத்தி மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கும், அதற்கு அனுமதி அளித்த துணைநிலை ஆளுநர் அவர்களுக்கும் புதுச்சேரி அதிமுக சார்பில் நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும், மக்களுக்கு தேவையான இலவச அரிசி, இலவச வேட்டி, புடவை, இலவச பொருட்கள் மற்றும் பல்வேறு உதவிப்பொருட்களுக்கு பதிலாக பணம் வழங்குவதை மக்கள் விரும்புவதாக துணைநிலை ஆளுநர் கூறியிருப்பது தவறான கருத்தாகும், பெரும்பாலான மக்கள் நேரடி பண பரிமாற்றத்திற்க பதிலாக அரசி உள்ளிட்ட உணவு பொருட்களாக பெறுவதையே விரும்புகின்றனர். 

    ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, இலவச கோதுமை மற்றும் பல்வேறு உணவுப்பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டால் படிப்படியாக விவசாயிகளிடம் இருந்து அரசு விவசாய உணவு பொருட்களை கொள்முதல் செய்வது நிறுத்தப்படும். 

    இதனால் விவசாய உற்பத்தி பொருட்கள் அனைத்தும் தனியாரிடம் விற்கும் சூழ்நிலை விவசாயிகளுக்கு ஏற்படும். இதன் மூலம் நாடுமுழுவதும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம் தலை தூக்கும். இதே போல் இலவச துணிகளுக்கு பதிலாக பணம் வழங்கப்படுவதால் அரசு சார்பில் செயல்பட்ட பல பஞ்சாலை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது கண்கூடான சாட்சியாகும். 

    நேரடி பண பரிமாற்றம் (Direct Money Transfer) என்பது மக்களுக்கு எதிரான திட்டமாகும். எனவே பழைய முறைப்படியே பணம் வழங்குவதற்கு பதிலாக இலவச அரிசி, இலவச உணவு பொருட்கள், இலவச துணிமணிகளை எவ்வித முறைகேடும் இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்க வேண்டும்.

    கடந்த கால திமுக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட சாலைகள் அனைத்தும் தரமற்றதாக போடப்பட்டதால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பெரும் விபத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பழுதடைந்த சாலைகளை பேட்ச் ஒர்க் என்ற முறையில் செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. 

    சாலை முழுவதுமாக போடாமல் ஆங்காங்கே பேட்ச் ஒர்க் செய்வதால் விபத்துகள்  அதிகரித்து வருகிறது. எனவே முதலமைச்சசர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களும் போடப்படும் சாலைகள் தரமாக போட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    மேலும், தற்போது போடப்பட்டு வரும் சாலைகள் தரமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளை தவிர்த்து ஒரு சிறப்பு உயர்மட்ட வல்லுநர் குழுவை பொதுப்பணித்துறை அமைச்சர் அமைக்க வேண்டும். அதன் மூலம்  போடப்பட்டுள்ள சாலைகள் தரமானதா என ஆய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் பேட்டியில் தெரிவித்தார். 

    விஜய்யின் ‘தளபதி-67’ குறித்து அப்டேட் சொன்ன லோகேஷ் கனகராஜ்

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....