நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
பிரதாப் போத்தன் அழியாத கோலங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவர் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர்.
கேரளாவை பூர்விமாகக் கொண்டவ பிரதாப் போத்தன், தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
69 வயதான பிரதாப் போத்தன், சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை ஏய்தினார். பிரதாப் போத்தன் நடிப்பில் வெளிவந்த மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்ளிட்டவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1985-ம் ஆண்டு வெளிவந்த ‘மீண்டும் ஒரு காதல் கதை’ திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி