Saturday, May 4, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பொன்னியின் செல்வன் எழுத்தாளரிடம் மொபைல் பறிப்பு...

    பொன்னியின் செல்வன் எழுத்தாளரிடம் மொபைல் பறிப்பு…

    குணச்சித்திர நடிகரும், எழுத்தாளருமான இளங்கோ குமரவேலிடம் இருந்து கைப்பேசி பறிக்கப்பட்டுள்ளது. 

    அபியும் நானும் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவரும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவருமானவர், இளங்கோ குமரவேல். 57 வயதாகும் இவர் தற்போது சென்னை அசோக் நகரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 

    இந்நிலையில், இவர் திரைப்படப் பணிகள் தொடர்பாக எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றுவிட்டு, கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டுக்கு செல்வதற்காக நடந்து வந்துள்ளார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் குமரவேல் வைத்திருந்த விலை உயர்ந்த கைப்பேசியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இளங்கோ குமரவேல், அம்பேத்கர் மணிமண்டபம் அருகே வரும்போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இதனால், திடுக்கிட்ட இளங்கோ குமரவேல் உடனடியாக பட்டினப்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்வதை உடனடியாக கைவிட வேண்டும் – அமைச்சக ஊழியர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....