தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முகக்கவசம் அணிவதும் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுகாதாரத்துறையினர் நடத்திய ஆய்வில், நேற்று 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும் 19 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், இதுவரை கொரோனா தொற்று பாதித்த மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி, மாணவர்களின் பெற்றோர்கள் 9 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்து; 6 பேர் பலி!