அருள்மொழிச் சோழன் மற்றும் வே.பிரபாகரன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ள கருத்து ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக மாறியுள்ளது.
சீமான் தெரிவித்துள்ளதாவது:
தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.
இதையும் படிங்க:இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவிருக்கிறது ஒருநாள் தொடர்….ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்ற அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேற்ப, ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்கு தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரியவரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெற்றிமாறனின் ‘ராஜ ராஜ சோழன்’ குறித்த பேச்சுக்கு சீமான் ஆதரவு தந்தது குறிப்பிடத்தக்கது.