அயலான் படத்தில் ஏலியன் பொம்மைக்கு சீஜி மூலம் உணர்ச்சிகளை கொடுத்துள்ளோம் என்றும், இதற்காக ரூ.2 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து 3 ஆண்டுகளான கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கனடா எனப் பான் இந்தியா படமாக வருகிற தீபாவளி அன்று அயலான் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும், 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அயலான் படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ், “ஏலியன் பொம்மைக்கு சீஜி மூலம் உணர்ச்சிகளை கொடுத்துள்ளோம். இதற்காக ரூ.2 கோடி செலவு செய்துள்ளோம். குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளோம். படத்தின் புரமோஷனுக்கு உபயோகிப்போம். வேறெந்த படத்திற்கும் அல்லாமல் இதற்கு 4500க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளை கொண்டு உருவாக்கியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தின் ஸ்னீக் பிக் காட்சிகள் வெளியீடு…