திருவள்ளூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இசை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, அடுத்துள்ள பட்டாபிராமில் வசித்து வரும் தம்பதிக்கு 16 வயது மகள் ஒருவர் இருக்கிறார். இவர் அருகே இருக்கும் ஒரு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர், இசை வகுப்புக்கு செல்வது வழக்கம். அதே பகுதியில் சுமார் 4 ஆண்டுகளாக இசை வகுப்பு நடத்தி வந்த சாமுவேல் என்ற நபரிடம் இந்தச் சிறுமி, பாட்டு கற்றுக்கொண்டு வந்துள்ளார்.
அப்போது அந்த நபர் அந்தச் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டி, அச்சிறுமியை அவர் பல முறை வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் தனது 4 நண்பர்களுடனும் அப்படி நடந்து கொள்ளுமாறு சாமுவேல் வற்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து, அந்தச் சிறுமி அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இருப்பினும் சாமுவேல் கைப்பேசி மூலமாக தொடர்புகொண்டு மீண்டும் பேசி அச்சிறுமியை தொந்தரவு செய்துள்ளார். இதனை அந்தச் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் இதுகுறித்து ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சாமுவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தேறிய பும்ரா.. ஆனாலும் இந்திய அணியில் இடமில்லையா – வெளிவந்த தகவல்