நடிகர் வடிவேலு நேற்றைய முன்தினம் திருச்செந்தூர் சுப்ரமணிய கோவிலில் தரிசனம் செய்தார். தரிசனத்தைத் தொடர்ந்து, வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பதில்களை தந்தும், சில கேள்விகளுக்கு பதிலளிக்காமலும் நகர்ந்துவிட்டார்.
தரிசன அனுபவம் எப்படி உள்ளது?
“திருச்செந்தூர் முருகனை பார்த்தது மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது. இந்த முருகனை வணங்கும்போது மக்களின் கஷ்டங்கள், குறைகள் எல்லாம் தீரும்.’’
துணவு, வாரிசு எந்தப் படத்தை முதலில் பார்ப்பீர்கள்?
“எனக்கு அதைப்பற்றி தெரியவில்லை. எல்லாப் படமும் ஓடணும். தயாரிப்பாளர் நல்லா இருக்கணும். சினிமா ஓடினால்தான் தொழிலாளர்கள் நல்லா இருக்க முடியும். அதனால்தான் எல்லா படமும் ஓடணும்.“
நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
”அது ஒரு குடும்ப படம். மக்கள், குழந்தை, மனைவியோடு படம் பார்த்தேன். அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். அந்தப் படம் தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.”
மாமன்னன் திரைப்படம் குறித்து ஏதும் தகவல் கூற முடியுமா?
”அது ஒரு நல்ல படம். ரொம்ப நல்லா வந்திருக்கு.”
சமூகவலைதளங்களில் அஜித்-விஜய் ரசிகர்கள் சண்டை குறித்து எழுப்பிய கேள்விக்கும், நடிகர் சிங்கமுத்து குறித்து எழுப்பிய கேள்விக்கும் நடிகர் வடிவேலு பதிலளிக்கவில்லை.
வடிவேலு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.
உணவு வகைகள் குறித்த வாக்கெடுப்பு; இந்தியாவுக்கு கிடைத்த அங்கீகாரம்…