வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், ரோஹித் சர்மா இந்தியாவுக்கு திரும்பி, மும்பையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டார். இந்நிலையில், வருகிற 22-ஆம் தேதி தொடங்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் சிகிச்சைப்பெற்று வரும் ரோஹித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க முடியாத காரணத்தினால், கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய நிலையில், இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா என்ற கேள்வியும் ஆவலும் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
அம்மா சென்டிமென்ட்டில் வாரிசு படத்தின் மூன்றாவது பாடல்… வெளிவந்த அப்டேட்..