Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்ட 3-வது வழக்கு!!!

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்ட 3-வது வழக்கு!!!

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவாகியுள்ளது.

    நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ராயபுரம் வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி திமுகவினரை அரைநிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயக்குமார்ரை கைது செய்தனர்.

    former minister jayakumar

    பின்னர், அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அனைவரையும் போலீசார் கைது செய்தனர் . ஜெயக்குமார் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் ஜெயக்குமார் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவாகியுள்ளது. முன்னாள் அமைச்சராக இருந்த ஜெயக்குமார் 5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை மிரட்டி அபகரித்துக்கொண்டதாக மகேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

    cases registered against jayakumar

    இந்த புகரின் அடிப்படையில் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல், குற்றத்தை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இதனை தொடர்ந்து ஜெயக்குமார் மகள் மற்றும் மருமகன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....