நடிகர் வடிவேலு ‘போண்டா மணி’ குறித்த கேள்விக்கு ‘அவருக்கு உதவி செய்யவேண்டும்’ என பதிலளித்தார்.
வைகைப்புயல் வடிவேலு தற்போது மிகவும் பிஸியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, நாய் சேகர் ரிட்டன், மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறேன் எனவும், விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படம் நடித்து வருவதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் ”அரசியல் நமக்கு தேவையில்லை, சினிமாவில் இருந்து கொண்டே நன்மை செய்யலாம்” என்றும் தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது, போண்டா மணி குறித்து வடிவேலுவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, ‘போண்டா மணிக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும்’ என்றார்.
முன்னதாக, சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வரும் நடிகர் போண்டா மணியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், சிகிச்சைக்கான முழு செலவையும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுதிட்டத்தின் மூலம் ஏற்கப்படும் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: போண்டா மணியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா. சுப்பிரமணியம்; மருத்துவ செலவை அரசே ஏற்றது!