சைமா விருது விழாவில் ஜெய்பீம் திரைப்படத்துக்கு ஒரு விருது கூட வழங்கவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் திரைப்படம் கடந்த வருடம் 2021-ம் ஆண்டு வெளிவந்தது. மணிகண்டன், லிஜோ மோல் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடிக்க, இயக்குநர் டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்கியிருந்தார். இத்திரைப்படமானது ஒரு சமுதாயத்தை மிக மோசமாக தரம் தாழ்த்தி உண்மைக்கு புறம்பாக சித்தரித்து சர்ச்சைகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
சூர்யாவே தயாரித்த இந்த ஜெய்பீம் திரைப்படம் சில விருதுகளை பெற்றது. இதில் நடித்த நடிகர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்கள் என பலருக்கும் அங்கீகாரங்கள் கிடைத்தன.
இந்நிலையில், தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் வெளியாகும் படங்களை அங்கீகரிக்கும் வகையில் சைமா விருதுகள் பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழாவில் பல்வேறு திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர். இந்நிலையில் இந்த சைமா விருது விழாவில் ஜெய்பீம் திரைப்படத்துக்கு ஒரு விருது கூட வழங்கவில்லை. இந்நிகழ்வு திரையுலகினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பலர் கொண்டாடியும் சில ரசிகர்களிடத்திலும் சர்ச்சையும் கிளப்பியுள்ளது .
இதையும் படிங்க: சோறு மட்டும் போடுங்கள், எங்களை கொண்டாட வேண்டாம் – சத்யராஜ் விளாசல்