ஆம்பூர், பிரபல ஷூ தொழிற்சாலையில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பரிதா குழுமத்தில் இன்று (ஆகஸ்ட் 25) 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பரிதா குழுமத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் ரூ.1500 கோடி மதிப்பிலான வியாபாரங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மற்றும் வருமான வரித்துறைக்கு வரி செலுத்தியுள்ளதா என, 20 ஆயிரம் பக்கங்களை கொண்ட பரிதா குழுமத்தின் ஆவணங்களை வருமான வரித்துறையினர் நகல் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, அந்த அலுவலகத்தில் இருந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிர்வாக மேலாளர்களிடம் வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், ஆம்பூரை சுற்றியுள்ள பல தனியார் ஷூ கம்பெனிகளில் பரிதா குழுமத்தின் கணக்கு மற்றும் நிர்வாகம் செயல்பாடுகளை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த சோதனையானது 3-வது நாளாக நடைபெறுகிறது.