Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ட்ரெண்டிங் ஆக காத்திருக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' !

    ட்ரெண்டிங் ஆக காத்திருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ !

    விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க, வரும் ஏப்ரல் மாதம் திரையில் எதிர்ப்பார்க்கப்படும் திரைப்படம்தான், காத்து வாக்குல ரெண்டு காதல்! விஜய் சேதுபதி – நயன்தாரா – விக்னேஷ் சிவன் – அனிருத் ஆகியோர் ஒன்றாக இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.

    naanum rowdythaan

    இதற்கு முன்பு இவர்கள் இணைந்த நானும் ரௌடிதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை மட்டும் பெற்றதல்லாமல், இளைஞர்களின் வழக்கு சொல்லாடலில் இப்படத்தின் வசனங்களும், இப்படத்தின் மேனரிசம்களும் இன்று வரை நீடிக்கிறது. 

    இப்படியான கூட்டணி மீண்டும் இணைகிறது என்றவுடனே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. அதற்கு ஏற்றவாறு பெயரிலேயே இப்படத்தில் புதுமையை காண்பித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். 

    kaathuvakkula rendu kaadahal  ஏற்கனவே காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து வெளிவந்த மூன்று பாடல்களும் இளைஞர்களிடம் மட்டும் அல்லாது பொதுமக்களிடமும் நல்லவரவேற்பை பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகமாக இருக்க இணையத்தையும் பாடல்கள் கலக்கின. இப்படத்தில் இருந்து வெளிவந்த போஸ்டர்களும் மக்களை கவர்ந்த வண்ணம் உள்ளன. 

    kvrk

    காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழுவால் சமீபத்தில் வெளியிடப்பட்ட டைட்டானிக் போஸ்டர் ட்ரெண்டிங்கில் தற்போதும் இருக்கிறது. பலரின் முகத்திலும் அந்த போஸ்டர் புன்னகையை வரவழைத்த படியே சமூக வலைத்தளம் எங்கும் உலவி வருகிறது.

    vijay sethupathy love

    இந்த போஸ்டர் ட்ரெண்டிங்கை முடித்து வைத்து மற்றொரு ட்ரெண்டிங்கை ஆரம்பித்து வைக்க உள்ளது, காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழு. ஆம்! இன்று மாலை ஆறு மணி அளவில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது. அனைத்திலும் புதுமையை நிகழ்த்தும் விக்னேஷ் சிவன் டீசரில் என்னென்ன புதுமையை விந்தைகளாக நிகழ்த்த இருக்கிறார் என்று பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....