குஜராத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் ஒரு மாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சூரத், ஜூனாகத், கிர், பாவ்நகர், தபி, டாங், வல்சாத் மற்றும் நவ்சாரி ஆகிய 8 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மும்பை தேசிய நெடுஞ்சாலை டாங் மற்றும் கட்ச் ஆகிய பகுதிகள் மூடப்படுவதாக குஜராத் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி கூறியுள்ளார்.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு