கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் முன் விரோதம் காரணமாக ஆசிரியை ஒருவரின் மகனை மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், ஹாட்லி கிராமத்தில் அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களாக முத்தப்பா மற்றும் கீதா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். அதே பள்ளியில் ஆசிரியை கீதாவின் மகன் பரத், நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் ஆசிரியர் முத்தப்பா ஆசிரியை கீதாவை முன் விரோதம் காரணமாக, மண்வெட்டியால் தாக்கினார். இதனைப் பார்த்த கீதாவின் மகனான பரத், தனது தாயை காப்பற்ற சென்றார். அப்போது, ஆத்திரத்தில் இருந்த முத்தப்பா, சிறுவன் பரத்தை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிவிட்டு, அவனை தூக்கி மாடியில் இருந்து வீசினார்.
இந்தக் கொடூர தாக்குதலில் சிறுவன் பரத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சிறுவன் பரத்தை அருகில் இந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிறுவன் பரத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தலைமறைவான ஆசிரியர் முத்தப்பாவை தேடும் பணி தொடங்கியுள்ளது.
பிரான்ஸ் தோற்றாலும் ரசிகர்கள் மனதில் இடம்படித்த எம்பாப்வே; வைரலாகும் ட்விட்!