இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில், இந்த நிலநடுக்கம் 3.9 ஆகப் பதிவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் காத்ரா பகுதியில் இருந்து 61 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 2:20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தரைப்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டருக்கு அடியில் உருவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
Earthquake of Magnitude:3.9, Occurred on 23-08-2022, 02:20:32 IST, Lat: 33.07 & Long: 75.58, Depth: 10 Km ,Location: 61km E of Katra, Jammu and Kashmir, India for more information Download the BhooKamp App https://t.co/1WjicbdF3S@ndmaindia @Indiametdept pic.twitter.com/YWvXq6Q4nI
— National Center for Seismology (@NCS_Earthquake) August 22, 2022
ஜம்மு காஷ்மீரில் உருவான இந்த நிலநடுக்கத்தால், சேதங்கள் ஏதும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜம்மு காஷ்மீரின் ஹன்லி கிராமத்தில் 3.1 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
இது போல, நேற்று (ஆகஸ்ட் 22) அதிகாலை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானீரின் வடமேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.1ஆகப் பதிவாகிய இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 20) 5.2 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் லக்னோவிலும், வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 19) 5.2 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் உத்தரகண்ட் மாநிலத்திலும் உணரப்பட்டது.