Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபோதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து தப்பியோடிய 17 பேர்! - தேடுதல் வேட்டையில் போலீஸ்!

    போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து தப்பியோடிய 17 பேர்! – தேடுதல் வேட்டையில் போலீஸ்!

    சென்னை திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பாடசாலை தெருவில் இமானுவேல் என்பவர் போதை மறுவாழ்வு மையம் வைத்து நடத்தி வருகிறார். இதில் குடிபழக்கம் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இங்கு போதைக்கு அடிமையானவர்களை அடிப்பது, தாக்குவது போன்ற செயல்கள் முற்றிலும் நடைபெறுவதில்லை. அதேபோல சங்கியிலால் கட்டி வைப்பது போன்ற செயல்களும் நடைபெறுவதில்லை. இயல்பாக எல்லாரையும் போன்றுதான் இவர்களும் தங்கியிருப்பார்கள். சுமார் மூன்று வாரம் இங்கு தங்கி சிகிச்சை பெறுவார்கள். சிகிச்சை முடிந்து வெளியே செல்லும்போது போதைப்பழக்கத்தை மறந்துதான் செல்வார்கள்.

    பிரச்சனை எங்கு ஆரம்பிக்கும் என்றால் மீண்டும் அவர்கள் வெளியே சென்றதும் அந்த போதைப்பொருள் அவர்களுக்குக் கிடைக்கத் தொடங்கும். சிகிச்சை பெற்று பல மாதங்கள், வருடங்கள் போதைப்பழக்கத்தைத் தொடாமல் இருந்தவர்கள்கூட மீண்டும் அந்தப் பழக்கத்துக்கு ஆட்பட்டு மீண்டும் சிகிச்சை எடுக்கும் நிலைக்குச் செல்வார்கள். ஒருவர் மீண்டும் அந்தப் பழக்கத்துக்குப் போவதற்கு அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பம், தனிநபர் ஆளுமை, வேலை, சூழல், உடல்நிலை போன்றவை முக்கியப் பங்காற்றுகின்றன.

    இந்நிலையில் இன்று அதிகாலை போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர்கள் மறு வாழ்வு மையத்தில் இருந்த ஜன்னலை உடைத்து அதன் வழியாக தப்பி சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பியோடியவர்களில் 8 பேர் போதை மறுவாழ்வு மையத்திற்கு மீண்டும் வந்தனர். மேலும் தப்பியோடிய 9 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்தச் சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் விசாரித்து விட்டு மேலும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர்களை மையத்தில் சிகிச்சை அளித்தவர்கள் தாக்கியதால் தப்பி சென்றார்களா? அல்லது அவர்கள் அங்கிருந்து சென்றதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

    வெளியானது ஜவான் டீசர்.. கம்பேக் கொடுப்பாரா ஷாருக்கான்..? அட்லீ சாதிப்பாரா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....