‘எட்டு வழி சாலை திட்டத்திற்கு நாங்கள் எதிரி கிடையாது’ என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மதுரையில் நேற்று (ஆகஸ்ட் 31) சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
எட்டு வழிச் சாலையை பொறுத்த அளவிற்கு முதல்வர், ‘பிரச்சனைகளை அலசி பார்த்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள். நிலம் கொடுப்பவரிடம் சந்தை மதிப்பிற்கான பணத்தை கொடுங்கள்’ என அறிவுறுத்தியுள்ளார்.
நாங்கள் இந்த திட்டத்துக்கு எதிரி கிடையாது. ஏற்கனவே நாங்கள் ஆட்சி நடத்தி இருக்கிறோம். நாங்களே பல சாலைகளை அமைத்திருக்கிறோம், கையகப்படுத்தி இருக்கிறோம். இப்போது ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.
சாலைகளை விரிவுபடுத்தித்தான் ஆக வேண்டும். நீங்கள் போகும் வண்டி, நான் போகும் வண்டி என நாளுக்குநாள் உற்பத்தி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அப்போது என்ன செய்ய முடியும்? சாலையை விரிவுபடுத்திதான் ஆக வேண்டும். அப்போது நிலத்தை கையகப்படுத்தி தான் ஆக வேண்டும். முதல்வர் வேண்டாம் என்று சொல்கிறார், சம்பந்தப்பட்ட அமைச்சர் சாலை போட வேண்டும் என்று சொல்கிறார் என எங்கேயாவது நிரூபியுங்கள்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர் பூலித்தேவன்- பிரதமர் மோடி புகழாரம்