விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு, இயக்கவும் செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து, அவர் உடல்நலம் தேறி ஓய்வில் இருந்தவர், தற்போது பிச்சைக்காரன் – 2 படத்திடன் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இயல்பாகவே ட்விட்டரில் சமூக கருத்துகளை தெரிவிக்கும் அவர் தற்போது ஒரு ட்விட் செய்துள்ளார்.
அதில், “வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன்தான்.யாதும் ஊரே யாவரும் கேளிர்.” என பதிவிட்டுள்ளார். இப்பதிவு சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
துருக்கி நிலநடுக்கம்; சிறுமியை மீட்க உதவிய ரோமியோ – ஜூலியட்!