Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா vs ஆஸ்திரேலியா: தர்மசாலாவில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இல்லை?

    இந்தியா vs ஆஸ்திரேலியா: தர்மசாலாவில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இல்லை?

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற இருந்த நிலையில், தற்போது இந்தூரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.  இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது. 

    இதைத்தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17-ஆம் தேதி டெல்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மூன்றாவது டெஸ்ட், தரம்சாலாவில் மார்ச் 1 முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால், தரம்சாலா விளையாட்டு மைதானத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றதால் டெஸ்ட் ஆட்டம் நடைபெறுவதற்கு உரிய தகுதியைக் கொண்டுள்ளதா என பிசிசிஐ ஆய்வு செய்தது.

    இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட், தரம்சாலாவுக்குப் பதிலாக இந்தூரில் நடைபெறும் என பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. மோசமான வெளிக்களம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதனால் இந்தூர் டெஸ்ட், மார்ச் 1 அன்று தொடங்கவுள்ளது. முன்னதாக, இந்தூரில் கடைசியாக 2019-ல் டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

    துருக்கி நிலநடுக்கம்; சிறுமியை மீட்க உதவிய ரோமியோ – ஜூலியட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....