நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதில் எந்த குழப்பமும் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேடு பகுதியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, “அதிமுக தலைமையில் கூட்டணி என்பதில் எந்த குழப்பமும் இல்லை. எங்கள் கூட்டணியில் அதிமுக பெரிய கட்சி என்பதால் எடப்பாடி பழனிசாமி கருத்தில் தவறில்லை.
2024 தேர்தலில் பல கட்சிகளுக்கு முடிவுரை எழுதப்படும். எந்த கட்சி பலமானது என அப்போது தெரியும். பிரதமரின் தமிழகம் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பாஜக சார்பில் வரவேற்பு தரப்படும். மேலும், பால் விலை உயர்வை கண்டித்து வரும் 15 ஆம் தேதி பாஜக சார்பில் 1,200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டன் கணக்கில் தங்கம்..! பல்லாயிரம் கோடி பணம்..? திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட ‘டெபாசிட்’ கணக்கு