இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் இன்று முதல் தொடங்க இருப்பதாக தனது ட்விட்டர் பதிவில் இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இணைந்து பணியாற்றிய திரைப்படம்தான் இந்தியன். 1996-ம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அவ்வபோது இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி பேச்சுகள் வந்த வண்ணமே இருந்தன.
இதைத் தொடர்ந்து, சுமார் 24 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இந்தியன் இரண்டாம் பாகம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்தார். 2019-ம் ஆண்டு லைகா நிறுவனம் தயாரிக்க ‘இந்தியன்-2’ படத்தின் படபிடிப்பு கமலுடன் ஆரம்பித்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கபட்டிருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் வந்த தகவலின்படி இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருக்கிறது என்ற அறிவிப்பு வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
இதன்பின்பு, திரைப்பட பிரியர்களிடம் ‘இந்தியன்-2’ திரைப்படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இச்சமயத்தில்தான், ‘இந்தியன்-2’’ திரைப்படத்தின் படப்படிப்பு இன்று முதல் தொடங்குவதாக படத்தின் இயக்குநர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
Good morning Indians, we are glad to announce that the remaining shoot for Indian 2 is commencing today! Need all of your support and wishes 🙏🧿 https://t.co/s1CjKSGXYM
— Shankar Shanmugham (@shankarshanmugh) August 23, 2022
லைகா மட்டுமே தயாரித்துக் கொண்டிருந்த ‘இந்தியன்-2’ திரைப்படத்தை தற்போது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.