Friday, May 3, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தமிழில் கலக்கும் 'ரஞ்சிதமே' பாடல்; தெலுங்கில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

    தமிழில் கலக்கும் ‘ரஞ்சிதமே’ பாடல்; தெலுங்கில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

    விஜய்யின் வாரிசு திரைப்படத்திலிருந்து ‘ரஞ்சிதமே’ பாடல் தெலுங்கில் நாளை வெளியாகவுள்ளது. 

    நடிகர் விஜய் தற்போது ‘வாரிசு’ திரைப்பட பணிகளில் பிஸியாகவுள்ளார். வாரிசு திரைப்படத்தை தோழா, மகரிஷி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் வம்சி இயக்குகிறார். தில் ராஜூ தயாரித்து வரும் வாரிசு திரைப்படமானது குடும்ப திரைப்படமாக உருவாகிவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மேலும், வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. பொங்கலுக்கு வாரிசு திரைக்கு வருமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, படத்தின் அப்டேட்டுகள் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். 

    இதைத்தொடர்ந்து, வாரிசு திரைப்படத்திலிருந்து ‘ரஞ்சிதமே’ என்ற பாடல் வெளிவந்தது. தமன் இசையில் உருவாகிய இப்பாடலை நடிகர் விஜய், பாடகி மானசி பாடியிருக்கிறார்கள். 

    இப்பாடலுக்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார். வெளியானதிலிருந்து இணையத்திலும், ரசிகர்களிடத்திலும் ஒரு கலக்கு கலக்கி வரும் ரஞ்சிதமே பாடல், யூடியூப் தளத்தில் 70 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும், ரஞ்சிதமே பாடலுக்கு ஏராளமானோர் ரீல்ஸ் செய்து வருகின்றனர். 

    இந்நிலையில், தமிழில் வெளிவந்த ‘ரஞ்சிதமே’ பாடல் தெலுங்கில் நாளை வெளியாகவுள்ளது. நாளை காலை 9.09 மணியளவில் தெலுங்கு மொழியில் ரஞ்சிதமே பாடல் வெளியாகிறது. வாரிசு திரைப்படம் வாரசுடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கால்பந்து உலகக் கோப்பை: நாக் அவுட்டிற்கு முன்னேறிய பிரேசில்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....