தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று லக்னோவில் தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்க அணி 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
அதன்படி, இதுவரை நடைபெற்ற இரு இருபது ஓவர் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று 2 மணியளவில் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இதையும் படிங்க:டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டது இந்திய அணி !
மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு ஷிகர் தவான் தலைமை தாங்குகிறார். இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது போலவே ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ரஜத் பட்டிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், ஆவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சஹார்.