நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா – விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய திரையுலகின் மிக முக்கிய நட்சத்திரங்களுள் முதன்மையானவர், ரஜினிகாந்த். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். முதல் மகள் பெயர் ஐஸ்வர்யா. இரண்டாம் மகள் பெயர் சௌந்தர்யா. இருவருமே இயக்குநர்கள். செளந்தர்யாவின் கணவர் பெயர் விசாகன். நேற்று இரவு ரஜினிகாந்த் குடும்பத்திற்கு நன்னிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
ஆம். நேற்று இரவு சௌந்தர்யா – விசாகன் தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை செளந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் சௌந்தர்யா தனது மகனின் விரலை பிடித்தவாறு உள்ளார்.
View this post on Instagram
கடவுள் மற்றும் பெற்றோர்களின் ஆசிர்வாதங்களுடன், வேத்தின் தம்பியான வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் விசாகன், வேத், மற்றும் நானும் மகிழ்ச்சியைடைகிறோம் என்றும் அப்பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், உருதுணையாக இருந்த மருத்துவர்களுக்கும் சௌந்தர்யா நன்றி தெரிவித்துள்ளார். தன் குடும்பத்திற்கு புதுவரவு வந்துள்ளதால் ரஜினிகாந்த் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து, திரையுலக ரசிகர்கள் சௌந்தர்யா – விசாகன் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் திரைப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.