Sunday, April 28, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வந்தது புது வரவு... மகிழ்ச்சியின் உச்சத்தில் ரஜினிகாந்த்

    வந்தது புது வரவு… மகிழ்ச்சியின் உச்சத்தில் ரஜினிகாந்த்

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா – விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

    இந்திய திரையுலகின் மிக முக்கிய நட்சத்திரங்களுள் முதன்மையானவர், ரஜினிகாந்த். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். முதல் மகள் பெயர் ஐஸ்வர்யா. இரண்டாம் மகள் பெயர் சௌந்தர்யா. இருவருமே இயக்குநர்கள். செளந்தர்யாவின் கணவர் பெயர் விசாகன். நேற்று இரவு ரஜினிகாந்த் குடும்பத்திற்கு நன்னிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. 

    ஆம். நேற்று இரவு சௌந்தர்யா – விசாகன் தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை செளந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் சௌந்தர்யா தனது மகனின் விரலை பிடித்தவாறு உள்ளார். 

    கடவுள் மற்றும் பெற்றோர்களின் ஆசிர்வாதங்களுடன், வேத்தின் தம்பியான வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் விசாகன், வேத், மற்றும் நானும் மகிழ்ச்சியைடைகிறோம் என்றும் அப்பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், உருதுணையாக இருந்த மருத்துவர்களுக்கும் சௌந்தர்யா நன்றி தெரிவித்துள்ளார்.  தன் குடும்பத்திற்கு புதுவரவு வந்துள்ளதால் ரஜினிகாந்த் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

    இதைத்தொடர்ந்து, திரையுலக ரசிகர்கள் சௌந்தர்யா – விசாகன் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் திரைப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....