Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழகத்தில் கடந்த ஆட்சியில் ஊழல்.. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கை

    தமிழகத்தில் கடந்த ஆட்சியில் ஊழல்.. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கை

    அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பொலிவுறு நகர் திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பான ஆய்வறிக்கை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. 

    பொலிவுறு நகர் திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் நடந்த முறைகேடு தொடர்பான ஆய்வறிக்கையை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார், முதல்வர் ஸ்டாலினிடம் இன்று வழங்கினார். அறிக்கையை தாக்கல் செய்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார், பொலிவுறு நகர் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கடந்த மே மாதம், பொலிவுறு நகர் திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் குறைபாடுகளை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவுக்கு மூன்று மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், உத்தரவின் அடிப்படையில் அக்குழு விசாரணை நடத்தி இன்று முதல்வரிடம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மேலும், சென்னை, மதுரை உள்பட பொலிவுறு திட்டங்கள் நடைபெற்ற மாவட்டங்களில், நேரடியாக ஆய்வு செய்து, திட்டப் பணிகளின் வரைபடங்களையும், பொறியாளரிகளிடம் பணிகள் நடைபெற்று வருவது குறித்து நேரில் கேட்டும் ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....