Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஓராண்டில் எவ்வளவு கொலைகள்? இது தான் திராவிட மாடல் ஆட்சியா? சீமான் விமர்சனம்!

    ஓராண்டில் எவ்வளவு கொலைகள்? இது தான் திராவிட மாடல் ஆட்சியா? சீமான் விமர்சனம்!

    தமிழகத்தை ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் விமர்சித்துள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் நிகழ்ந்த லாக்அப் மரணங்கள் குறித்து இவர் விமர்சித்து உள்ளார்.

    தமிழகத்தில் கடந்த 20 நாட்களில் 20 கொலைகள் நடந்ததும், இலட்சக்கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும், திமுக அரசு பொறுப்பேற்ற ஒரு ஆண்டில் 9 லாக் அப் மரணங்கள் நடந்திருப்பது தான் திராவிட மாடல் ஆட்சி என சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரை முருகன், சென்னை புழல் மத்திய சிறையில் உள்ளார். இவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சீமான். பிறகு, பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான், குண்டர் சட்டத்தில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டிருப்பது, பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

    மாட்டுக்கறி ஏற்றுமதியில் முதலிடம் வகிப்பதாக கூறிக் கொள்கிறது மத்திய அரசு. ஆனால், மாட்டுக்கறியை இஸ்லாமிய நாடுகளுக்கு தான் ஏற்றுமதி செய்து வருகிறது. அனைத்து நாடுகளுடனும் ஒப்பந்தம் செய்திருக்கும் மத்திய அரசு, எதற்காக நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேச வேண்டும்? அங்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள இந்நிலையில், இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? உலக நாடுகள் நம்மை கைவிட்டு விட்டு தனிமைப்படுத்தப்படுவோம். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இங்கும் உருவாகும் நிலை ஏற்படும்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக முதல்வர் தடை விதிப்பதாக கூறியிருந்தார். ஆனால் இப்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தலைநகரான சென்னையில் நேற்று, ஒரு பெண் உயிரிழந்தும் கூட தமிழிக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நடித்து வருகின்றனர். பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படுவதை நாம் எப்படி விளையாட்டு என்று எடுத்துக் கொள்ள முடியும். கொலை செய்வதெல்லாம் ஒரு விளையாட்டா? தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டியது அவசியம்.

    துப்பபுரவப் பணியாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்து உறுதிப்படுத்த வேண்டும். 20 நாட்களில் 20 கொலைகள், 9 லாக் அப் மரணங்கள் என ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டில் அனைத்தும் நடந்துள்ளது. ஆனால், அரசு தரப்பில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாக கூறி கொள்வது நியாயமற்றது.

    திராவிடம் என்பது சமஸ்கிருதம்; மாடல் என்பது ஆங்கிலம். 20 நாளில் 20 கொலை, இலட்சக்கணக்கான கிலோ கஞ்சா பிடிபட்டிருப்பது தான் திராவிட மாடல் என சீமான், திமுக அரசை விமர்சித்துள்ளார்.

    வைகாசி விசாகம் 2022 : பூஜை செய்யும் முறையும் அதன் பலன்களும் உங்களுக்காக இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....