ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடனம், நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், பாடலாசிரியர் என பல முகங்களை கொண்டவராக உள்ளார் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கத்தில் வெளிந்த முனி, காஞ்சனா படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றன. இருப்பினும், ராகவா லாரன்ஸ் நடிப்பையே தற்போது பிராதனமாக கொண்டுள்ளார்.
இவர் தற்போது ஜிகர்தண்டா-2, ருத்ரன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் தற்போது ருத்ரன் படத்தின் படப்படிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.
மேலும், இப்படத்தில் இருந்து வெளிவந்த ஃப்ரஸ்ட் லுக், க்ளிம்ப்ஸ் வீடியோ போன்றவை ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் ருத்ரன் படம் ஏப்ரல் 14-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.
குடியிருப்புப் பகுதிக்குள் இறந்து கிடந்த புள்ளிமான்; காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி