Sunday, April 28, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஆர்ஆர்ஆர் கூட்டணியில் மீண்டும் ஒரு பிரம்மாணடத் திரைப்படம்: தெலுங்கு தயாரிப்பாளர் உறுதி!

    ஆர்ஆர்ஆர் கூட்டணியில் மீண்டும் ஒரு பிரம்மாணடத் திரைப்படம்: தெலுங்கு தயாரிப்பாளர் உறுதி!

    இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் நடப்பாண்டில் வெளியான படம் தான் “ஆர்ஆர்ஆர்”. இந்தப் படத்தில், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்திருந்தனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    மேலும், 1,000 கோடிக்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்தது. இப்போது, ஓடிடி தளத்தில் இந்தப் படம் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து வெளிவந்த திரைப்படங்களில், தங்களது ஓடிடி தளத்தில் 45 மில்லியன் மணி நேரப்பார்வைகளை இந்தப் படம் பெற்று, முதலிடத்தைப் பிடித்துள்ளதாக நெட்பிளிக்ஸ் தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி, அதிக பட்ஜெட்டில் படம் எடுப்பவர். அதற்குப்
    பலனாக, அவரின் படங்கள் அனைத்தும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இவருடைய கடந்த திரைப்படமான பாகுபலி 2-வும், பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    தியேட்டர்கள் மற்றும் ஓடிடி தளம் என ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு கிடைத்த
    வரவேற்பு தான், இந்த மெகா கூட்டணியை மீண்டும் ஒன்றிணைத்து ஒரு புதிய
    திரைப்படத்தை உருவாக்க பேச்சு வார்த்தையை ஆரம்பித்து வைத்திருக்கிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரிடமும் இது பற்றிய பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளதாக டோலிவுட்
    வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.

    ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் போலவே, இந்த புதிய படத்தையும் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்கள். நடிகர் ராம்சரணை வைத்து, மாவீரன் என்ற படத்தை ஏற்கனவே இயக்குநர் ராஜமவுலி இயக்கி இருக்கிறார். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இப்படத்தின் கதாநாயகி காஜல் அகர்வால், மாவீரன் திரைப்படத்தின் மூலமாக சினிமா உலகில் தனிமுத்திரையை பதித்தார்.

    தற்போது இயக்குநர் ராஜமவுலி, தெலுங்கில் பிரபலமான நடிகர் மகேஷ்பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு
    முடிந்த பிறகு, அனைத்தும் கூடி வரும் பட்சத்தில், ”ஆர்ஆர்ஆர்” கூட்டணியில்
    அடுத்த படம் உருவாகலாம் என்கிறது டோலிவுட் வட்டாரம். இந்த செய்தி
    ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியானது என்பதில் ஐயமில்லை. இந்த பிரம்மாண்ட
    கூட்டணியின் அடுத்த படத்தைக் காண ரசிகர்கள் இப்போதே தயார் நிலையில் தான்
    இருப்பார்கள்.

    ‘பத்தல பத்தல’ கமல்ஹாசனின் இந்த ‘சாகாத’ முகம் உங்களுக்குத் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....