Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'சில குறைபாடுகள் இருக்கலாம்' - கலாச்சார விழாவில் முதல்வர் பேச்சு

    ‘சில குறைபாடுகள் இருக்கலாம்’ – கலாச்சார விழாவில் முதல்வர் பேச்சு

    ஏனாம் கலாச்சார விழாவை எம்எல்ஏ கொல்லப்பள்ளி அசோக் தலைமை ஏற்று நடத்தி இருக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

    புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் 19 வது ஏனாம் கலை விழா 3 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார். இதற்காக நேற்று மாலை ஏனாம் சென்ற முதல்வருக்கு புதுச்சேரி அரசின் தில்லி பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, ஏனாம் கலாச்சார விழாவை எம்எல்ஏ கொல்லப்பள்ளி அசோக் தலைமை ஏற்று நடத்தி இருக்க வேண்டும். இதில் ஏனாம் வளர்ச்சி திட்டங்களை வலியுறுத்தி இருக்கலாம். ஆனால் ஏனாமை அரசு புறக்கணிப்பதாக கூறி விழாவிற்கு வராதது அரசுக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றார். 

    கடந்த தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், தற்போதைய எம்எல்ஏ மற்றும் தில்லி பிரதிநிதியின் முக்கிய கோரிக்கை சூதாட்ட விடுதிகளை மூடுவது தான். சூதாட்டத்தின் மோசமான விளைவுகளை மகாபாரத கதை விளக்கியது. அதனால் ஏனாம் உட்பட எந்த பகுதியிலும் சூதாட்ட விடுதி நடத்த அரசு அனுமதிக்காது என்றும் அவர் பேசினார். 

     மேலும், அரசை பொருத்தவரை அனைத்து பிராந்தியமும் வளர்ச்சி பெற வேண்டும். சில குறைபாடுகள் இருக்கலாம். அரசு விரைவாக செயல்படவில்லை என கூறலாம். அதற்கு காரணம் புதுச்சேரி முழு மாநில அந்தஸ்து பெற்ற பகுதியில்லை. இருப்பினும் மத்திய அரசின் உதவியுடன் 4 பிராந்தியமும் வளர்ச்சி பெறும் என்றும் முதல்வர் கூறினார்.

    நடிகர் ஷாருக்கான் நாளை ரசிகர்களுக்கு கொடுக்கவுள்ள பரிசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....