Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபுரோ கபடி போட்டி; அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உத்தரபிரதேச யோதாஸ்

    புரோ கபடி போட்டி; அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உத்தரபிரதேச யோதாஸ்

    நேற்று நடைபெற்ற புரோ கபடி போட்டியின் ஆட்டத்தில் உத்தரபிரதேச யோதாஸ் அணி 10 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

    இந்நிலையில், புரோ கபடி போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் உத்தரபிரதேச யோதாஸ் மற்றும் யு மும்பா, பாட்னா பைரேட்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ்,  ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் போன்ற அணிகளுக்கு இடையேயான ஆட்டங்கள் நடைபெற்றன. 

    இந்த ஆட்டங்களில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 32-26 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. இதையடுத்து, பாட்னா பைரேட்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையே நடைபற்ற ஆட்டத்தில், 40-34 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் வெற்றி பெற்றது. 

    மேலும், உத்தரபிரதேச யோதாஸ் மற்றும் யு மும்பா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 38-28 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச யோதாஸ் வெற்றிபெற்றது. 

    மேலும், நாளை இரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ள புரோ கபடி போட்டியில் மூன்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

    அவையாவன;

    • தபாங் டெல்லி மற்றும் புனேரி பல்தான் 
    • தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ்
    • ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் 

    கால்பந்து உலகக் கோப்பை; முன்னேறிய தென் கொரியா..வெளியேறிய கானா, உருகுவே

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....