பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியுள்ளது.
இரு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இரு பாகங்களில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதைமாந்தர்களை அவ்வபோது போஸ்டராக இணையதளத்தில் படக்குழு வெளியிட்டு வந்தது. இதையடுத்து வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றன.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, ‘யு/ஏ’ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் கால அளவு 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.