பொன்னியின் செல்வன் படத்தினுடைய இரண்டாம் பாகத்தின் டிரைலர் வருகிற மார்ச் 29-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் கல்கி எழுதிய மிகப் பிரபலமான புதினம் பொன்னியின் செல்வன். இப்புதினத்தை இயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரிலேயே இரு பாகங்கள் உடைய படமாக எடுத்தார். இதில் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா, சரத்குமார் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இப்படம் 450 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனையை புரிந்தது.
இதைத்தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து ‘அகநக’ எனும் பாடல் வெளியானது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தினுடைய இரண்டாம் பாகத்தின் டிரைலர் வருகிற மார்ச் 29-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
எப்படி இருக்கிறார் பாம்பே ஜெயஶ்ரீ – அவரது குடும்பம் சொன்ன தகவல்..