Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்காமன்வெல்த் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்

    காமன்வெல்த் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்

    காமன்வெல்த் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் நடைபெற்று வந்தது. இப்போட்டிகளில் 215 வீரர், வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி கலந்து கொண்டது. ஜூலை 29-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 8) அனைத்து போட்டிகளும் நிறைவடைந்தன. 

    பொதுவாக, இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில்தான் இந்த ஆண்டும் காமன்வெல்த் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்கம் பகுதியில் நடைபெற்றது. 

    இந்த காமன்வெல்த் போட்டியில், இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-ம் இடம் பிடித்தது. ஒட்டுமொத்தமாக, இப்போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் 61 பதக்கங்களை வென்றனர். 

    இந்நிலையில், இதுகுறித்து தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதாவது:

    இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் 72 நாடுகளுக்கு இடையிலான காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய நாட்டின் சார்பில் போட்டியிட்டு, பதக்கங்களை வென்று, இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    காமன்வெல்த் விளையாட்டுகளில், டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத்கமல்-சத்யன் இணைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

    அனைவரும் மேலும், பல போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கங்களைப் பெற்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்க எனது நல்வாழ்த்துகள்.

     இவ்வாறாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

    உணவு விநியோக ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் உள்ளதா? – அன்புமணி கேள்விக்கு அமைச்சரின் பதில்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....