Friday, May 3, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்காதல் கணவருக்கு புது வீடு பரிசளித்த நயன்தாரா!

    காதல் கணவருக்கு புது வீடு பரிசளித்த நயன்தாரா!

    நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் வியாழக்கிழமையன்று (ஜூன் 9) சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

    ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘நானும் ரௌடிதான்’ திரைப்படத்தில் நடித்தார். அப்போது முதல் அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதனை வெளிப்படையாக தெரிவித்து வந்தனர்.

    கடந்த சில மாதங்களாகவே, இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக, நயன்தாரா அறிவித்தார். இந்நிலையில், திருமணம் ஜூன் 9 அன்று நடைபெற உள்ளதாக, விக்னேஷ் சிவன் அறிவிக்கவே, தொடர்ந்து திருமண பத்திரிகையும் சமூக வலைதளங்களில் வெளியானது.

    இந்நிலையில், இருவரின் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வியாழக்கிழமையன்று (ஜூன் 9) காலை நடைபெற்றது. திருமணத்திற்கு முன்னதாக, விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இன்று ஜூன் 9. இந்த நாள் நயனுக்கானது” எனவும், திருமணத்தை தன் வாழ்வின் புதிய அத்தியாயம் என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்கள் திருமணத்தை முன்னிட்டு இருவரும் ஒருவருக்கொருவர் பல கோடி மதிப்புள்ள பரிசு பொருட்களை பரிமாறி கொண்டுள்ளனர். நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பரிசளித்துள்ளாராம். அது போல நயன்தாராவும் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்களா ஒன்றை வாங்கி விக்கிக்கு பரிசளித்து உள்ளாராம். இந்த புது வீட்டிற்கு புதுமணத்தம்பதியினர் விரைவில் குடியேறுவர்கள் எனத்தெரிகிறது.

    மகனின் புகைப்படத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்: இணையத்தில் வைரல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....