Wednesday, May 8, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஒரே மேடையில் கமல் - ரஜினி; மீண்டும் கொண்டாட தயாராகும் கோலிவுட்

    ஒரே மேடையில் கமல் – ரஜினி; மீண்டும் கொண்டாட தயாராகும் கோலிவுட்

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது. 

    மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியுள்ளது. 

    இரு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இரு பாகங்களில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இதனை அடுத்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதைமாந்தர்களை அவ்வபோது போஸ்டராக இணையதளத்தில் படக்குழு வெளியிட்டு வந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றன.

    இந்நிலையில், இன்று சென்னை நேரு மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில், தென்னிந்திய திரையுலகத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மேலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் இந்த விழாவில் பங்குபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படமே பொன்னியின் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ரிலிஸாகுது ‘வெந்து தணிந்தது காடு’..அதுனால ‘அரசே விடுமுறை கொடு’ – கூல் சுரேஷ் வேண்டுகோள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....