இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கத்தில் நடிகை பார்வதி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்க் கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சமூகச் செயற்பாட்டாளர் என லீனா மணிமேகலை பல்வேறு அடையாளங்களில் அறியப்பட்டு வருகிறார். இவர் அதிகமாக ஆவணப்படங்களையும் சில திரைப்படங்களையும் எடுத்துள்ளார். சமீபத்தில் ‘மாடத்தி’ எனும் படத்தினையும் எடுத்து வெளியிட்டு இருந்தார்.
இப்படம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியது. மேலும், சமீபத்தில், இவர் இயக்கிய ‘காளி’ எனும் ஆவணப்படத்தின் போஸ்டர் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இப்போஸ்டரில் கையில் சிகரெட்டுடன் இருக்கும் ‘காளி’ வேடத்தில் ஒருவர் இருப்பார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது இந்து மத உணர்வாளர்கள் புகாரளித்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், தற்போது பிரபல மலையாள நடிகை பார்வதி நடிக்கவிருக்கும் திரைப்படத்தை இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
முன்னதாக, பா.ரஞ்சித் – சியான் விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தில் பார்வதி காதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘நாயகன் மீண்டும் வர….’ – திரைக்கு வரும் அவதார்!