Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதொடங்கவுள்ள கடைசி ஒருநாள் போட்டி...தொடரைக் கைப்பற்றுமா இந்திய அணி?

    தொடங்கவுள்ள கடைசி ஒருநாள் போட்டி…தொடரைக் கைப்பற்றுமா இந்திய அணி?

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

    தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்க அணி 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

    இருபது ஓவர் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில், இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்தது.

    இதையும் படிங்க:பள்ளி சீருடையில் 12-ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்! வீடியோவை வெளியிட்டவர் மீது அதிரடி நடவடிக்கை!

    இதைத்தொடர்ந்து, ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில்  தென்னாப்பிரிக்காவை இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது டெல்லியில் உள்ள அருன் ஜெட்லி மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணியளவில் தொடங்க உள்ளது. தொடரை இந்தியா கைப்பற்றுமா என்று பொறுத்திருந்து காண்போம். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....