இந்திய அணிக்கு நான் மீண்டும் திரும்புவேன் என கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர், ஷிகர் தவான். இவர் இறுதியாக வங்கதேசத்துக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இத்தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இதையடுத்து, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. இதுவரை அறிவித்துள்ள பிறதொடர்களுக்கான அணியிலும் ஷிகர் தவான் இடம்பெறவில்லை.
இந்நிலையில், அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அப்பேட்டியில் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலாவது;
இந்த வாழ்வானது மேடு பள்ளங்கள் கலந்தது. என்னை விட ஒருவர் நன்றாக விளையாடினால் அது நல்லதுதான். அப்படி விளையாடியதால் தான் அந்த வீரர் அணியில் இருக்கிறார். நான் இல்லை. எனக்கென என்ன இருக்கிறதோ அதில் நான் தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன்.
இந்திய அணிக்கு நான் மீண்டும் திரும்புவேன். அப்படி நடந்தால் நல்லது. ஒருவேளை நான் திரும்பாமல் போனாலும் அது நல்லதுதான். இதுவரையில் நான் சில சாதனைகளை புரிந்துள்ளேன். அதில் மகிழ்ச்சியாக உள்ளேன். எது கிடைக்குமோ அது நிச்சயம் கிடைக்கும். அதற்காக நான் தவிக்கப்போவதில்லை.
இவ்வாறு கூறினார்.
மேலும், ஐபிஎல் தொடரின் பஞ்சாப் அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்றிருக்கு ஷிகர் தவான் விரைவில் ஐபிஎல் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோந்து பணி சரியில்லை; திருவண்ணாமலையில் 6 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்!