கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணி போலந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
கத்தாரில், நடப்பாண்டிற்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுகள் முடிவடைந்து, நாக்-அவுட் சுற்றுகள் ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற நாக்-அவுட் ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் போலந்து அணிகள் மோதின. இந்த ஆட்டமானது நேற்று 8.30 மணியளவில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின், முதல்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கும் வாய்ப்பினை தொடர்ந்து இழந்து வந்தன. இருப்பினும், முதல்பாதி ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஜிரவுட் ஒரு கோல் அடித்து தனது அணியின் கோல் கணக்கை தொடங்கினார். இந்த கோலின் மூலம், பிரான்ஸ் அணி 1-0 என்ற முன்னிலை வகித்தது.
இருப்பினும், இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாஃபே ஒரு கோலும், கூடுதல் நேர ஆட்டத்தின் 90+1-வது நிமிடத்தில் அவரே மேலும் ஒருகோல் என இரண்டு கோல்களை அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
3-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது. ஆறுதலாக ஆட்டத்தின் 90+9 வது நிமிடத்தில் போலந்து வீரர் லெவன்டோவ்ஸ்கி ஒருகோல் தனது அணிக்காக அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம், பிரான்ஸ் அணி வெற்றிபெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
புரோ கபடி; வெற்றிக்கனியை எட்டிய பெங்களூர், குஜராத்