முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதாவின் உருவ சிலை மற்றும் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடிப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொதுமக்களும் பங்கேற்றனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற சூளுரைப்போம் என அதிமுகவினர் உறுதிமொழியும் எதுத்துக் கொண்டார்கள்.
அதே சமயம் சேப்பாக்கம் அரசினர் மாளிகையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேரணியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்மாதிரியாக விளங்கும் இந்தியா! புகழாரம் சூட்டிய ஜெர்மனி