Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'தமிழா தமிழா' நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறாரா கரு.பழனியப்பன்- அதிர்ச்சி தகவல்..

    ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறாரா கரு.பழனியப்பன்- அதிர்ச்சி தகவல்..

    இயக்குநர் கரு பழனியப்பன் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். 

    இயக்குநர் கரு பழனியப்பன், நடிகர் அருள்நிதியை வைத்து தற்போது ஒருபடம் இயக்கி வருகிறார். அதேநேரம், தனியார் தொலைக்காட்சியில் ‘தமிழா தமிழா’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக தனது பிறந்தநாளான இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

    “எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள்!!!

    இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது. தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட “தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்தது…!

    சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் விரைவில் சந்திப்போம்” 

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    டபிள்யுபிஎல்: யுபி வாரியர்ஸ் அணியை பந்தாடிய தில்லி அணி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....