Sunday, April 28, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய கோப்ரா படக்குழுவினர் - காவல் துறையினர் தடியடி

    ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய கோப்ரா படக்குழுவினர் – காவல் துறையினர் தடியடி

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்ரம் 7 வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள இப்படம் வரும் 31 ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

    இதனை தொடர்ந்து கோப்ரா படக்குழுவினர் படத்தின் ப்ரோமொஷன்காக ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். இதன் முதற்கட்டமாக நடிகர் விக்ரம் குழுவினர் விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்து உள்ளனர். மேலும் இன்று திருச்சி மற்றும் மதுரையில் உள்ள ரசிகர்களையும் கல்லூரி மாணவ, மாணவியர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், நடிகர் விக்ரம் குழுவினர் விமான நிலையத்தில் இருந்து வெளி வந்த போது அவரது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். இந்நிகழ்வு, விமானத்தில் பயணிகள் வரும் பகுதியில் நடைபெற்றதால் அவ்விடத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

    நடிகர் விக்ரமை காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் விமான நிலைய காவல் அதிகாரிகளால் அமைதியான முறையில் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. வேறு வழியின்றி காவல் துறையினர் ரசிகர்களின் மீது லேசான தடியடி நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதன் பின்னர், நடிகர் விக்ரம் தனது ரசிகர்களை பார்த்து கையசைத்தவாறு காரில் ஏறிச்சென்றார்.

    இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேர பரபரப்பும், பதற்றமும் நிலவியது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....