Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சந்திரமுகி-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

    சந்திரமுகி-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

    ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேல் இணைந்து நடிக்கும் சந்திரமுகி திரைப்படத்தின் 2-ம் பாகத்தின் படப்படிப்பு மைசூரில் தொடங்கியது.

    கடந்த 2005-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “சந்திரமுகி”. இத்திரைப்படம் பி.வாசு இயக்கத்தில் உருவானது. இத்திரைப்படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா மற்றும் வடிவேலு போன்றவர்கள் நடித்திருந்தனர். 

    இந்நிலையில், சமீபத்தில் சந்திரமுகி திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சந்திரமுகி முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி.வாசுதான் சந்திரமுகி 2-ம் பாகத்தையும் இயக்குகிறார்.

    சந்திரமுகி 2-ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். மேலும் இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்துக்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். 

    இந்நிலையில், சந்திரமுகி 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று மைசூரில் தொடங்கியது. இச்செய்தியை இத்திரைப்படத்தின் நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகவா லாரன்ஸ், அன்பான நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, என் தலைவரும் குருவுமான ரஜினிகாந்த் அவர்களின் ஆசியுடன் மைசூரில் சந்திரமுகி 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார். 

    மேலும், தனது ட்விட்டர் பதிவுடன் நடிகர் ரஜினிகாந்த் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். 

    அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு- 3 பேர் படுகொலை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....