ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேல் இணைந்து நடிக்கும் சந்திரமுகி திரைப்படத்தின் 2-ம் பாகத்தின் படப்படிப்பு மைசூரில் தொடங்கியது.
கடந்த 2005-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “சந்திரமுகி”. இத்திரைப்படம் பி.வாசு இயக்கத்தில் உருவானது. இத்திரைப்படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா மற்றும் வடிவேலு போன்றவர்கள் நடித்திருந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் சந்திரமுகி திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சந்திரமுகி முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி.வாசுதான் சந்திரமுகி 2-ம் பாகத்தையும் இயக்குகிறார்.
சந்திரமுகி 2-ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். மேலும் இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்துக்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.
இந்நிலையில், சந்திரமுகி 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று மைசூரில் தொடங்கியது. இச்செய்தியை இத்திரைப்படத்தின் நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
Hi friends and fans, Today Chandramukhi 2 shooting begins in Mysore with my Thalaivar and guru’s @rajinikanth blessings! I need all your wishes! 🙏🏼🙏🏼 #Chandramukhi2 pic.twitter.com/dSrD3B5Xwh
— Raghava Lawrence (@offl_Lawrence) July 15, 2022
இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகவா லாரன்ஸ், அன்பான நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, என் தலைவரும் குருவுமான ரஜினிகாந்த் அவர்களின் ஆசியுடன் மைசூரில் சந்திரமுகி 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், தனது ட்விட்டர் பதிவுடன் நடிகர் ரஜினிகாந்த் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு- 3 பேர் படுகொலை